நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே தோமையார்புரத்தில், கடல் பகுதியில் தூண்டில் விளைவு அமைக்கக் கோரி அப்பகுதி மீனவ மக்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ஏழாவது நாளாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், மக்கள் பந்தலில் தங்கியபடி பங்கேற்றனர். இப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.