திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தனிநபர்கள் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு, மதுரை உயர் நீதிமன்ற கிளை இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், ஏன் தேவஸ்தானமே தீபம் ஏற்றி பிரச்சனையை தவிர்க்கலாமே? எனத் தெரிவித்த நீதிபதிகள், சாதாரண விஷயத்தில் அரசு பிடிவாதம் காட்டி நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.