சென்னை: மணமகன் திருமண நாளில் கைது

சென்னையில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமண நாளன்று மணமகன் கார்த்திக் கைது செய்யப்பட்டார். திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் ஆவடியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் நேற்று (பிப்.22) திருமணம் நடைபெற இருந்தது. நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றியபோது, கார்த்திக் இளம்பெண்ணிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கார்த்திக் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
