3நாளுக்கு பின் பூண்டி ஏரியில் கரை ஒதுங்கிய இளைஞர் உடல்

0பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை சுற்றிப் பார்க்கச் சென்ற சென்னையைச் சேர்ந்த யாசிக், ராகேஷ், சுபான், சமீர் அகமது ஆகிய நான்கு நண்பர்களில், யாசிக் மற்றும் ராகேஷ் ஒரு படகிலும், சுபான் மற்றும் சமீர் அகமது மற்றொரு படகிலும் ஏரிக்குள் சென்றுள்ளனர். அப்போது, யாசிக் சென்ற படகு செல்பி எடுக்கும்போது கவிழ்ந்து, யாசிக் நீரில் மூழ்கி மாயமானார். ராகேஷ் நீந்தி கரை திரும்பினார். நண்பர்கள் சுபன், சமீர் அகமது படகுடன் கரைக்கு திரும்பினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மூன்று நாட்களாக தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், யாசிக்கின் சடலம் மீட்கப்பட்டது. பெண்ணாலூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி