முதலமைச்சர்
விஜய் உத்தரவின்படி, உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நேற்று (மே 28) தமிழ்நாடு முழுவதும் தவெக நிர்வாகிகள் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டியில் தவெக சார்பில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு தவெக எம்எல்ஏ விஜயகுமார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அவர் வருகைக்கு தாமதமானதல் அன்னதானத்திற்கு வந்த மக்கள் பெரும் அவதிக்குள் ஆளாகினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது