கும்மிடிப்பூண்டி அருகே, கணவர் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அவரது நண்பர் நவீன் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மயக்கமடையச் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கணவர் திரும்பியதும் பாதிக்கப்பட்ட பெண் நடந்ததை தெரிவிக்க, அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் நவீனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.