திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தமிழக ஆந்திர எல்லையில் செயல்படும் சவுடு மண் குவாரியில் கனிமவள விதிமுறைகளை மீறி 15 அடிக்கும் மேலாக இரவு பகலாக லாரிகள் மூலம் மண் கொண்டு செல்லப்படுவதால் இரவு நேரங்களில் கடைவீதிகள் உள்ள பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் மண் லாரிகளை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் தூசி பறந்து கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
அடிக்கடி விபத்
துக்கள் ஏற்படுவதால் அச்சத்துடனே சென்று வருகின்றனர். சட்டவிரோதமாக இரவு நேரங்களில் மண் கொண்டு செல்லும் லாரிகளை சோதனை செய்து பறிமுதல் செய்யாமல் ஊத்துக்கோட்டை வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் லாரிகளை பறிமுதல் செய்யாமல் தொடர்ந்து அலட்சியத்துடன் வேடிக்கை பார்த்து வருகின்றனர். சட்டவிரோதமான மண் கடத்தலுக்கு துணையாக உள்ளனர்.