சென்னை வானகரம் அருகே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பைக்கில் சென்ற சேகர் தடுமாறி கீழே விழுந்தபோது, அவர் மீது சொகுசு பேருந்து ஏறி இறங்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திருவேற்காடு பகுதியை சேர்ந்த சேகர், பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.