திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மழை நீர் வடிகால்வாய் மூடப்படாமல் திறந்த நிலையில் கிடப்பதால், மழை நீருடன் கழிவு நீரும் கலந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பள்ளி மாணவர்கள் தவறி விழும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.