பெரியபாளையம் அடுத்த கொசவன்பேட்டை கிராமத்தில், விஜயகுமார் வீட்டில் ஓட்டை உடைத்து 5 சவரன் நகை மற்றும் 80,000 ரூபாய் திருடிய வழக்கில், கொசவன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மற்றும் குணசேகரன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பணம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.