திருவொற்றியூர், காலடிப்பேட்டையில் வசிக்கும் துர்கா(43) என்பவர் கடந்த 15ஆம் தேதி வெளியூர் சென்றிருந்தபோது, மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 10 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனர். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், திருவொற்றியூர் போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.