திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சரவணப் பொய்கையில் அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான மக்கள் இன்று வந்தனர். குடும்பத்தில் இறந்தவர்களின் பெயரைச் சொல்லி, தேங்காய், பூ, பழங்கள் கொடுத்து தர்ப்பணம் செய்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது.