திருத்தணி அடுத்த அருங்குளம் பேருந்து நிறுத்தத்தில் நேற்று காலை 10க்கும் மேற்பட்ட பயணியர் திருத்தணிக்கு செல்ல காத்திருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள், பயணியரை கத்தியை காட்டி மிரட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்த கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இரு இளைஞர்களையும் கைது செய்தனர்.