
பூண்டி புழல் செம்பரம்பாக்கம்ஏரிகள்27 ஆண்டுக்குபின் நிரம்பல்
சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்கள் 27 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக நிரம்பி, 100% கொள்ளளவை எட்டியுள்ளன. பூண்டி நீர்த்தேக்கம் 35 அடி ஆழத்தில் 3231 மில்லியன் கன அடியாகவும், புழல் நீர்த்தேக்கம் 21.20 அடி ஆழத்தில் 3300 மில்லியன் கன அடியாகவும், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் 24 அடி ஆழத்தில் 3645 மில்லியன் கன அடியாகவும் நிரம்பியுள்ளன. கடந்த 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.































