திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சி பட்டறை கிராமத்தில் எம்ஜிஆர் நகர் ஏரிக்கரை பகுதியில் சரித்திர பதிவேடு ரவுடியான நவீன் என்ற குள்ளச்சீனுவை முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் தலையில் கல்லைப் போட்டு சரமாரியாக அறிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி உள்ளனர். சம்பவம் குறித்து மணவாளநகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் பட்டறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.