6 வயது ஆண் குழந்தை கடத்தல்: வடமாநில நபர் கைது

0பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் அருகே செஞ்சிபானம்பாக்கம் பகுதியில், வடமாநிலத்தைச் சேர்ந்த அமீத்குண்டல் என்பவர் 6 வயது குழந்தையை கடத்திச் சென்றார். குழந்தையை விஜயலட்சுமி என்பவர் வீட்டில் பார்த்துக் கொண்டிருந்தபோது, மாடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அமீத்குண்டல் பறித்துச் சென்றார். விஜயலட்சுமியின் அலறல் கேட்டு எஸ்பெல்குமார் விரட்டிச் சென்றபோது, அமீத்குண்டல் குழந்தையை கீழே விட்டு தப்ப முயன்றார். எஸ்பெல்குமார் அளித்த புகாரின் பேரில், கடம்பத்துார் போலீசார் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த அமீத்குண்டலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.