திருவொற்றியூரில், தனியார் நிறுவன ஊழியரான வினோத்குமார், நண்பர் ஜெய்ஷயாம் என்பவரால் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கத்தியால் சரமாரியாகத் தாக்கப்பட்டார். இதில் வினோத்குமாரின் வயிறு, தொடைப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. தாக்குதல் நடத்திய ஜெய்ஷயாம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிருக்கு போராடிய வினோத்குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய ஜெய்ஷயாமை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.