மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினசரி 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு பணியாற்றிய தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து மே.7-ல் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனிடையே நிலுவையில் உள்ள சம்பள பணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.