திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், தேவர்கண்டநல்லூர் நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசு தொகுப்புகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையருமான திரு. த. ஆனந்த் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் ஆய்வு செய்தனர். இவர்களுடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி. பல்லவி வர்மாவும் உடனிருந்தார்.