தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில மையக் குழுவின் முடிவின்படி மன்னார்குடி வட்டக் கிளையில் வட்டத்தின் ஒன்றிய தலைவர் M. ஆரோக்கியமேரி தலைமையில் ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் வேலை உத்தரவு ஆணை வழங்கிய தமிழக அரசை கண்டித்தும் தொகுப்பூதியத்தை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் செயலாளர் M. செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டச் செயலாளர் இரா. செந்தில்ராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் J. பொன்முடி, மாவட்ட இணைச் செயலாளர் சுகுமாரன், மாவட்டப் பொருளாளர் சுப்ரமணியன் நிகழ்வுறையாற்றினார். நிகழ்ச்சியின் நிறைவாக P. அகிலா நன்றி கூறினார்.