திருவாரூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பல்ராம் நெகி நேற்று (பிப்ரவரி 25) நேரில் பார்வையிட்டார். பயணிகள் காத்திருப்பு அறையில் உள்ள கழிவறை சுகாதரமாக இல்லாததைக் கண்டு, ரயில் நிலைய உதவி மேலாளரை இந்தியில் கண்டித்த அவர், கழிவறையை உடனடியாக சுத்தம் செய்ய உத்தரவிட்டார். இதுபோன்று மீண்டும் நடந்தால் பணியிடை நீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பிவிடுவேன் என்றும் அதிகாரிகளை எச்சரித்தார்.