கூத்தாநல்லூர் அருகே வடகட்டளை கிராமத்தில் செல்லும் வெள்ளை ஆற்றின் மூலம் பூதமங்கலம், பனங்காட்டங்குடி, நீர்மங்கலம், கானூர் வடகட்டளை, ஓகைபேரையூர் பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கு நீர் சென்றது. தற்போது ஆற்றின் நடுவே மணல் சேர்ந்து புதர் மண்டி இருப்பதால் கிராமங்களுக்கு குறைந்த அளவே தண்ணீர் செல்கிறது, சில பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில்லை. எனவே வெள்ளை ஆற்றை தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.