குரூப் 2 மற்றும் குரூப் 2A முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருவாரூரில் இலவச முதன்மை தேர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி இம்மாதம் 17ஆம் தேதி முதல் திருவாரூர் விளமலில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறும். தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயன்பெற மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.