தமிழக பள்ளிக் கல்வித்துறை நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் காலாண்டு விடுமுறையில் சிறப்பாக முகாம் நடத்திய மாவட்ட தொடர்பு அலுவலர்களுக்கு புதுக்கோட்டையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், திருவாரூர் மாவட்டத்தில் என்எஸ்எஸ் முகாமினை சிறப்பாக நடத்தியதற்காக மாவட்ட தொடர்பு அலுவலர் கமலப்பனுக்கு பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.