திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் 279 மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வ. மோகனச்சந்திரன் மடிக்கணினிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கே. கலைவாணன் மற்றும் கல்லூரி முதல்வர், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.