திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நிதி அறிவியல் வாரம்-2026 முன்னிட்டு, பாதுகாப்பான மற்றும் நம்பகமான நிதி சூழலை உருவாக்க உதவும் விளம்பர பதாகைகள் வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வ. மோகனச்சந்திரன் கலந்துகொண்டு விளம்பர பதாகையை வெளியிட்டார். இந்த நிகழ்வில் வருவாய் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.