திருவாரூர்: தாய், தந்தை இழந்த மாணவிக்கு அரசு உயர்தர படிப்புக்கு உதவி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில், தாய் மற்றும் தந்தையை இழந்த மாணவி ஜெய வர்ஷினி, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றார். பெற்றோர் இல்லாத காரணத்தால் மேற்படிப்பு தொடர முடியாமல் இருந்த நிலையில், திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் கலைவாணி நேரில் சந்தித்து மாணவிக்கு உயர்தர படிப்புக்கு உதவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த உதவியில் அரசு அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்
