திருவாரூர் - Thiruvarur

திருவாரூர்:  பைக்கிலிருந்து தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு

திருவாரூர்: பைக்கிலிருந்து தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் சுரக்காயூர் சொந்த ஊராகக் கொண்ட நிரவி கோயில்பத்து பகுதியைச் சேர்ந்த செல்வகணபதி (66), மதுபோதையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றபோது, நிரவி முதல் சாலை ஓஎன்ஜிசி கேட் அருகே நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து உறவினர் குமாரசாமி அளித்த புகாரின் பேரில், திருப்பட்டினம் சாலை போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


திருவாரூர்
May 16, 2026, 17:05 IST/

ஆண் இனமே மொத்தமா அழியப்போகுது: பகீர் ஆய்வு

May 16, 2026, 17:05 IST
மனிதர்களின் பாலினத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் 'Y' குரோமோசோம், காலப்போக்கில் தொடர்ந்து சுருங்கி வருவதாகவும், எதிர்காலத்தில் அது முற்றிலும் அழியும் அபாயம் உள்ளதாகவும் மரபணு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான கண்டுபிடிப்பு ஆண் இனத்தின் இருப்புக்கே ஆபத்தாக முடியலாம் என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது. இருப்பினும், இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் மனித இனம் அழியாமல் தங்களை காத்துக்கொள்ள மாற்று மரபணு வழிகளை கண்டறியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நன்றி:NewsTamil