தூத்துக்குடி மாவட்டம் கயத்தாற்றில், அண்டை வீட்டுக்காரர் மகாராஜன் (50) கத்தியால் குத்தியதில் காயமடைந்த இசக்கியம்மாள் (26) பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.