கோவில்பட்டி ரயில் நிலையத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்ற சென்னை சேர்ந்த 52 வயது பயணி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.