தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா சிலை பின்புறம் உள்ள சுதர்சன் டீக்கடை அருகே கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் எம். எஸ். முத்து மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.