தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் இன்று 12ஆம் தேதி மற்றும் நாளை 13ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நேற்று இரவு தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 57.50 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதிகபட்சமாக சூரங்குடியில் 13 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.