தூத்துக்குடியில், பைக் மோதி விபத்து ஏற்படும் நிலையில் வந்ததை தட்டிக்கேட்ட அனந்தகுமார் (26) என்ற பெயிண்டர் மீது இசக்கி (32) ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் தாக்கியதில், அனந்தகுமார் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தடுக்க முயன்ற அவரது நண்பரும் காயமடைந்தார். சம்பவத்துக்குப் பிறகு தப்பியோடிய இசக்கியை போலீசார் கைது செய்தனர்.