ரயில் நிலையங்களில் மேலும் ஒரு பயணச்சீட்டு எந்திரம்

82பார்த்தது
ரயில் நிலையங்களில் மேலும் ஒரு பயணச்சீட்டு எந்திரம்
தூத்துக்குடி, திருச்செந்தூர் ரயில் நிலையங்களில் மேலும் ஒரு தானியங்கி பயணச்சீட்டு எந்திரம் அமைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அலுவலக செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது: மதுரை ரயில்வே கோட்டத்தில் 11 ரயில் நிலையங்களில் உள்ள 151 பயணச்சீட்டு விற்பனை எந்திரங்களில் பணப்பரிவர்த்தனைக்காக கடந்த ஆகஸ்டு மாதம் கியூ ஆர் கோடு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ஆகஸ்டு மாதம் மொத்த வருமானத்தில் 1. 76 சதவீதம் கியூ ஆர் கோடு மூலம் பணப்பரிவர்த்தனை நடந்து இருந்தது.

இது செப்டம்பர் மாதம் கடைசியில் 5. 70 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இந்த பணப் பரிவர்த்தனையால், பயண சீட்டுக்கு பணம் செலுத்துதல், அதற்கு பிறகு மீதி சில்லரை வாங்குதல் போன்றவை இல்லாமல் எளிதாக, விரைவாக பயணச்சீட்டு வாங்க முடிகிறது. பயணச்சீட்டு அலுவலகம் முன்பு காத்திருக்கும் நேரமும் குறைகிறது.

இந்த நடைமுறை 27 பயண சீட்டு முன்பதிவு மையங்கள், 67 முன்பதிவில்லாத பயண சீட்டு விற்பனை மையங்கள், 57 ஒருங்கிணைந்த முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு விற்பனை மையங்கள் ஆகியவற்றில் அமலில் உள்ளது. இந்த நடைமுறையை பயன்படுத்தி முன்பதிவு பயண சீட்டுகள், முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள், மாதாந்திர மற்றும் காலாண்டு சீசன் டிக்கெட்டுகள், நடைமேடை அனுமதி சீட்டுகள் ஆகியவற்றை பெறலாம்.

தொடர்புடைய செய்தி