தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு பகுதியில் கடந்த 13. 9. 2025 அன்று பொதுச் சொத்தை சேதப்படுத்திய வழக்கில் சம்பந்தப்பட்ட இசக்கிதுரை (27) என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட எஸ். பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் முறப்பாடு காவல் நிலைய போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இசக்கிதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.