தூத்துக்குடி விமான நிலையத்தில் பனிமய மாதா ஆலயம் உள்ளிட்ட மிக முக்கியமான அடையாளங்களை பதிவு செய்திட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி அன்னை பரதர் நல தலைமைச் சங்கம் தலைவர் சேவியர் வாஸ் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது போல் தூத்துக்குடி விமான நிலைய இயக்குநரிடமும் மனு அளித்தனர். இதில், சங்கத்தின் பொதுச் செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் காஸ்ட்ரோ, அவைத்தலைவர் ஞாயம் ரொமால்ட், துணைத் தலைவர் ஹாட்லி, செயலாளர் ராஜா போஸ் ரீகன், நிர்வாக செயலாளர் ஆர்தர் மச்சாது, செயற்குழு உறுப்பினர்கள் பெப்பின், முறாயிஸ் மற்றும் ஷெரான் ஆகியோர் உடனிருந்தனர்.