தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஒத்தாசை மாதா ஆலய பங்குத்தந்தை பன்னீர்செல்வம் (69) மீது, ஆலயத்தில் பயிற்சி பெற வந்த 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.