சகோதரி வெட்டிக் கொலை: வாலிபர் வெறிச்செயல் - நண்பருடன் கைது

0பார்த்தது
சகோதரி வெட்டிக் கொலை: வாலிபர் வெறிச்செயல் - நண்பருடன் கைது
செங்கல்பட்டு மாவட்டம், செய்துங்கநல்லூரில், தகாத உறவு வைத்திருந்ததாக சந்தேகித்து தனது சொந்த அக்காவை தம்பி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சண்முகத்தாய் (எ) சுமித்ரா (35) என்பவர், கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வசித்து வந்தார். அவரது நடத்தை குறித்து ஏற்பட்ட குடும்பத் தகராறில், தம்பி முத்துராஜா (27) தனது நண்பர் வசந்துடன் வீட்டிற்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளார். ஆத்திரத்தில் அரிவாளால் தாக்கியதில் சுமித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய முத்துராஜா மற்றும் வசந்தை சில மணி நேரங்களில் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி