தூத்துக்குடியில் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் குழு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (18.11.2025) மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப. அவர்கள் தலைமையேற்ற இக்கூட்டத்தில், மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு. இரா. சீதாராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்டத்தின் சுற்றுலா வசதிகள், புதிய திட்டங்கள், சுற்றுலா தள மேம்பாட்டு பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் விரைவான முன்னேற்றம் செய்ய தேவையான வழிமுறைகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டன.