நெல்லையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு தினசரி பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிது. இந்த நிலையில், இந்த ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் ரயில்கள் நேரம், எண்கள் மாற்ற விவரம் வருமாறு: -
வண்டி எண் 56741 காலை 7. 00 மணிக்கு பதில் 6. 50 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு சென்றடைகிறது.
வண்டி எண் 56735 காலை 9. 45 மணிக்கு பதில் 9. 50 மணிக்கு புறப்பட்டு 11. 50 மணிக்கு சென்றடைகிறது.
வண்டி எண் 56743 மதியம் 1. 50 மணிக்கு பதில் 1. 40 மணிக்கு புறப்பட்டு 4. 20 மணிக்கு சென்றடைகிறது.
வண்டி எண் 56737 மாலை 6. 15 மணிக்கு பதில் 6. 20 மணிக்கு புறப்பட்டு 8. 30 மணிக்கு சென்றடைகிறது.