தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் செல்வவிநாயகர் புரம் பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 மாத பெண் குழந்தை ஆதிரா உயிரிழந்தது. தாய் ராதா மகேஸ்வரி தலையில் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்த பத்துக்கும் மேற்பட்டோர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். சிப்காட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பரிதாபகரமான நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.