தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 365 நாளும் ஓய்வில்லாமல் பணிபுரிந்து வருகின்றனர். வழங்கும் கூலி வாழ்க்கைக்குரிய கூலியாக இல்லை. மாவட்ட ஆட்சியர் அறிவித்தலின்படி தூய்மை தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி ஆணையின்படி கனரக தூய்மை ஓட்டுநர்களுக்கு ரூ. 636, தூய்மை இலகுரக ஓட்டுநர்களுக்கு ரூ. 598, தூய்மை பணியாளர்களுக்கு ரூ. 497 வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர் மற்றும் ஓட்டுநர் கோரிக்கைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் முன்னிலையில் நடந்தது. பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் தொழிலாளர்களுக்கு 2024 மற்றும் 2025 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்த GO, குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும் என்று முடிவானது. தொழிலாளர்களுடைய PF, ESI, முறையாக தொழிலாளர் கணக்கில் வரவு வைத்து இஎஸ்ஐ கார்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் கொடுக்க ஆவணம் செய்யப்படும் என்று ஒப்பந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டது. பேச்சுவார்த்தையில் ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சகாயம், பொன்ராஜ், மின்னல் அம்ஜித், சிவராமன் முருகன் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.