தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளரும், தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி, 39-ஆவது வட்டக் கழகச் செயலாளருமான திருச்சிற்றம்பலம் அவர்களுடைய தாயார் திருமதி தாயம்மாள் மரணமடைந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன். அன்புச் சகோதரி தாயம்மாளை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.