தூத்துக்குடியில் கிறிஸ்தவர்களின் தவக்காலத் தொடக்கமான சாம்பல் புதன் இன்று (பிப்ரவரி 18) அனுஷ்டிக்கப்பட்டது. பனிமயமாதா பேராலயம், திரு இருதய ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று, நெற்றியில் சாம்பல் சிலுவை அடையாளமாக பூசிக் கொண்டனர். திரு இருதய ஆலயத்தில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் வழிபாடு நடைபெற்றது. தவக்காலம் முடிவில் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.