தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மருமகன் அஜய் கட்டையால் தாக்கியதில் மாமனார் ஆசிர்வாதம் (55) பரிதாபமாக உயிரிழந்தார். மது அருந்திய நிலையில் வாக்குவாதம் அடிதடியாக மாறியதில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தலைக்கு அடிபட்ட ஆசிர்வாதம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மருமகன் அஜய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மத்தியபாகம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.