தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாளொன்றுக்கு சுமார் ரூ. 20 கோடி மதிப்பில் மீன் ஏலம் நடைபெற்று வந்தது. 5,000 தொழிலாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்தத் தொழிலை நம்பி வாழ்ந்து வந்தனர். தற்போது மீன்வரத்து குறைந்ததால், தினமும் 30-50 படகுகள் மட்டுமே கடலுக்குச் செல்கின்றன. ஒரு படகுக்கு ரூ. 2 லட்சம் வரை செலவாகும் நிலையில், வருமானம் போதாமல் நஷ்டம் அதிகரித்துள்ளது. இதனால் 7,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மானிய விலையில் டீசல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.