தூத்துக்குடி மாநகராட்சியில 60 வார்டுகள் உள்ளது. மாநகர தெருக்களில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் செல்லும் பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நாய்கள் தொடர்பான புகார்களுக்கு 18002030401 என்ற கட்டணமில்லாத எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார்.