தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்க சிறப்பு தனிப்படை காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அதிகாலை நேரத்தில் ஒரு மதுபானக் கூடத்தின் பூட்டை உடைத்து போலீசார் சோதனை நடத்தியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனையின் போது பொருட்கள் கீழே தள்ளப்பட்டதாகவும், இது பொதுமக்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.