நந்தி பகவான் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்!

2பார்த்தது
நந்தி பகவான் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்!
ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவான் மற்றும் சங்கர ராமேஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக சுவாமி மற்றும் அம்பாள் ரிஷப வாகனத்தில் ஆலய வளாகத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி