தூத்துக்குடியில், 8 ஆண்டுகளாக காதலித்து வந்த பெண் வேறொருவரை திருமணம் செய்துகொண்டதால் மனமுடைந்த நிபின் இமானுவேல் (25) என்ற இளைஞர், ஹேர் டை குடித்து தற்கொலை செய்து கொண்டார். பெண் வீட்டார் காதலை எதிர்த்த நிலையில், திருமணம் முடிந்தும் கௌசிகா நிபினை தொடர்பு கொண்டு பேசியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிபினின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள், கௌசிகா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்ய புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.